நுரையீரல் புற்று நோய்தான் உலகளவில் அதிகம் தாக்கும் புற்று நோய். மற்ற புற்று நோய்களை விட காப்பாற்றக் கூடிய சதவீதம் மிகவும் குறைவு.
பெண்களை விடஆண்களை அதிகம் தாக்கக் கூடியது. நுரையீரல் புற்று நோய் சிகரெட் பிடிப்பதால்தான் அதிகம் தாக்குகிறது இருப்பினும் சிகரெட் பிடிக்காதவர்களையும் தாக்கும் அபாயம் உள்ளது.
சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் இருப்பதால், மிக ஆபத்தான கதிர்வீச்சு நிறைந்தவாயுங்களை நுகர்வதால், தொடர்ந்து வருடக்கணக்காய் மாசுப்பட்ட புகையை சுவாத்துக் கொண்டிருப்பது என பலகாரணங்கள் இருக்கின்றது.
அறிகுறிகள்
- நெஞ்சு வலி மற்றும் இருமல் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும்.
- ரத்த வாந்தி வரும்.
- கபம் துப்பும்போது ரத்தம் கலந்து வரும்.
- மூச்சிரைப்பு அதிகம் வரும். தலைவலி, மூட்டு வலி ஏற்படும்.
- அதிக புகைப்பிடிப்பவர்களுக்க்கு நுரையீரல் புற்று நோய் வரும் ஆபத்து மிக அதிகம்.
மூலிகை மசாலா பானத்தினை தினமும் குடித்து வந்தால் மிக ஆபத்தான நுரையீரல் புற்று நோயை நெருங்க விடாமல் தடுக்க முடியும்.
தேவையானவை
- மஞ்சள் பொடி – 2 ஸ்பூன்
- கருமிளகு – 1 ஸ்பூன்
- கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு.
தயாரிக்கும் முறை
மேலே சொல்லப்பட்டிருக்கும் எல்லா மசாலா பொருட்களையும் ஒன்றோடொன்று கலந்து பொடி செய்து கொள்ளுங்கள். இந்த பொடியை தினமும் உண்வைல் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமையல் செய்யும்போது குழம்பில், பொரியல் என எல்லாவற்றிலும் கலந்து கொள்ளுங்கள்.
குறிப்பு
மஞ்சள், கருஞ்சீரகம் இரண்டுமே புற்று நோயை எதிர்க்கும் திறன் பெற்றவை. மிளகு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். குறிப்பாக நுரையீரலுக்கு கருமிளகு அற்புத பலனைத் தருபவை.